ஆண் தேவதை

ஓர் ஆணிண் வாழ்க்கை எப்படி இருக்கிறது என்பதை நான் அறிந்த என் நண்பர்கள் மற்றும் சகோதரர்களின் வாழ்வியலை அடிப்படையாக கொண்டு எழுதியுள்ளேன்....  

ஓரு ஆண் தன்னுடைய சிறு வயதில் தாய் தந்தை அன்புடன் வளர்கிறான்.

பள்ளி பருவத்தில் நண்பர்களுடன் பழகுகிறான்.அவன் பதின்ம பருவங்களிள் வீட்டின் சுழ்நிலை அறிந்து அதற்கேற்ப தன்னை மாற்றி கொள்ளுகிறான்.
அவனுடைய ஆசைகள் நிராசை ஆகின்றன.

கல்லூரி பருவத்தில் தோழர்களுடன் பயணிக்கிறான்.அவனுடைய வாலிபத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும் காலம்.

உண்மையான அன்பிற்கும் பொய்யான உறவுக்கும் வேறுபாடு அறியும் காலம் அது

அந்த கல்லூரி பருவத்தில் காதல் வருகிறது... ஆனால் பல ஆண்களுக்கு வீட்டு சுழ்நிலை ,பொருளாதார சிக்கல்,சகோதர,சகோதரி வாழ்க்கை என தியாகம் செய்யப்பட வேண்டியுள்ளது பின் திருமணம் ..

திருமண வாழ்க்கையும் சில நேரங்களில் ஆண்களை சுழ்நிலை கைதியாக்குகிறது... பெற்றோரா? மனைவியா? என.குழம்பிதவிக்கிறான் அவன்

இதில் உறவினர்களின் தவறான புரிதல்களையும் தீர்க்க பாடுபடுகிறான்...
மனைவி குழந்தைகளின் தேவைகளை தீர்க்க வேலையில் ஈடுபட்டு பொருள் ஈட்டுகிறான்......

அவனுக்கான தேவைகள் சுருக்க படுகின்றன....
அவன் அவனுக்காக வாழ்வது அரிதாகி போகிறது சில ஆண்களின் வாழ்கையில்,
ஆணும் தேவதையே
தன் மனைவிக்கு, குழந்தைக்கு... முதுமையில் பெற்றோருக்கு
ஆண் தேவதைதான்.......

RECENT POST

தேங்காய் நீரில் இத்தனை நன்மைகளா?

ஒரு கோப்பை தேங்காய் நீரில் இத்தனை நன்மைகளா?????? ✳ தேங்காய் நீரில் கலோரிகள் மிகக்குறைவு. இதனை அருந்துவதால் உடல் புத்துணர்ச்சி அட...