கர்ப்பக் கால உணவுப் பழக்கம் சில குறிப்புகள்

வழக்கமாக எடுத்துக்கொள்ளும் உணவைக்காட்டிலும் 300 கலோரிகள் கூடுதலாக எடுத்தாலே போதும்.

கொழுப்புச் சத்தும் தேவையானதுதான். கொழுப்பில் கரையக்கூடிய வைட்டமின்கள் ஏ, டி, ஈ மற்றும் கே ஆகியவை, குழந்தையின் வளர்ச்சிக்கு அவசியம். ஒரு நாளைக்கு 70 கிராம் என்ற அளவுக்கு உணவில் எண்ணெய் சேர்க்கலாம்.

கர்ப்பக் காலத்தில் இரண்டு வகையான தாது உப்புகள் மிகவும் அவசியம். ஒன்று கால்சியம், மற்றொன்று இரும்பு. கர்ப்பக் காலத்தில் ரத்தத்தின் அளவு 50 மடங்கு அதிகரித்துவிடுவதால், ரத்தச் சிவப்பு அணுக்கள் உற்பத்திக்கு, இரும்புச் சத்து மிகமிக அவசியம்.  

இரும்புச் சத்து மாத்திரை எடுத்துக்கொள்வதனால்கூட மலச்சிக்கல் ஏற்படலாம். இதுபற்றி டாக்டரிடம் ஆலோசனை பெறுவது அவசியம். இரும்புச் சத்து அதிகம் உள்ள வால்நட், பேரீச்சம்பழம் போன்றவற்றைச் சேர்த்துக்கொள்ளலாம்.

குழந்தையின் எலும்பு மற்றும் பல் வளர்ச்சிக்கு கால்சியம் மிகவும் அவசியம். பால், மோர், தயிர் போன்ற பால் பொருட்களில் இதைப் பெறலாம். காபி, தேநீர் மற்றும் குளிர்பானங்களில் உள்ள காஃபின் என்ற பொருள், கால்சியம் கிரகிக்கப்படுவதைத் தடுக்கும். எனவே, அவற்றைக் குறைத்துக்கொள்வது நல்லது. பாலில் பாஸ்பரஸும் உள்ளது. இதுவும் பல் மற்றும் எலும்பு வளர்ச்சிக்குப் பெரிதும் அவசியம்.

அனைத்து வைட்டமின் மற்றும் தாது உப்புகள் எளிதில் கிடைக்க பச்சைக் காய்கறிகள், நார்ச் சத்துள்ள உணவுகள், பழங்களை அதிக அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும். தினசரி உணவில் ஒன்றரை கப் வேகவைத்த காய்கறி அல்லது ஒரு கப் பச்சைக் காய்கறியைச் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

ரத்தத்தின் அளவு அதிகரிப்பதால், சோடியமும் தேவைப்படுகிறது. எனவே, உப்பை முற்றிலும் தவிர்க்காமல், குறைத்துக்கொள்வது நல்லது.

ஒரு நாளைக்கு இரண்டரை லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். இது, செரிமானப் பிரச்னையைச் சரிசெய்ய உதவும். இரண்டு கப் பால் குடித்துவிட்டோமே என்று தண்ணீர் குடிப்பதைக் குறைத்துக்கொள்ள வேண்டாம்.

RECENT POST

தேங்காய் நீரில் இத்தனை நன்மைகளா?

ஒரு கோப்பை தேங்காய் நீரில் இத்தனை நன்மைகளா?????? ✳ தேங்காய் நீரில் கலோரிகள் மிகக்குறைவு. இதனை அருந்துவதால் உடல் புத்துணர்ச்சி அட...