விவசாயம் இயற்கை விவாசாயமாக மாறிய கதை

விவசாயம் இயற்கை விவாசாயமாக மாறிய கதை 

மண் மணம் மாறாமல், நீர்வளம் குறையாமல், சுற்றுச்சூழல் அழியாமல், உணவு குணம் குன்றாமல், உடல்நலம் கெடாமல் நமது முன்னோர் பின்பற்றிய உழவுத் தொழில், தற்போது இயற்கை வேளாண்மை என்ற புதிய பெயரில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இயற்கையோடு இயைந்த வேளாண் நடைமுறைகளைத்தான் உழவு என்று நமது முன்னோர்கள் கூறிவந்தனர். 

1960-களில் உணவுப் பஞ்சம் தலைவிரித்தாடியபோது, உணவு தானிய உற்பத்தியைப் பெருக்குவதற்காக அப்போதைய மத்திய அரசால் கொண்டுவரப்பட்டதுதான் 
பசுமைப் புரட்சி.

அதிக மகசூல் தரும் கலப்பு விதை, வேதி இடுபொருள், நீர்ப்பாசனம் போன்ற அறிவியல் ரீதியான அணுகுமுறைகள் மூலம் உணவு உற்பத்தி பெருக்கப்பட்டதையே பசுமைப் புரட்சி என்றழைக்கிறார்கள்.

உணவு உற்பத்தியைப் போலவே நோய் உற்பத்தியும் இந்தியாவில் பெருகவே, இதற்கான காரணத்தை தேடியபோது, பசுமைப் புரட்சி தந்த பக்கவிளைவுகள் என்று தெரியவந்தது. அதனைத் தடுக்கும் விதமாக, 2000-ஆம் ஆண்டு முதல் இந்தியாவில் புத்துயிர் பெற்றுள்ளது இயற்கை வேளாண்மை எனும் நமது பழைமையான உழவு முறை..

RECENT POST

தேங்காய் நீரில் இத்தனை நன்மைகளா?

ஒரு கோப்பை தேங்காய் நீரில் இத்தனை நன்மைகளா?????? ✳ தேங்காய் நீரில் கலோரிகள் மிகக்குறைவு. இதனை அருந்துவதால் உடல் புத்துணர்ச்சி அட...