தண்ணீருக்கு அழிவில்லை:
மழை, உலகுக்கு உயிரூட்டும் அமுது. ஆனால், அது அமில
மழைபாகவோ அல்லது விஷவாயு மழைபாகவோ இருந்தால்
அதன் விளைவுகள் எவ்வாறு இருக்கும்
பொருளாதாரம், ஊடகம், நுண்பொறியியல் போன்ற துறைக
ளின் கூட்டு முயற்சியால் உலகமயமாக்கல் சூழலில், இயற்கை
யாக வான் கொடுக்கும் மழையைவிட மனிதன் உருவாக்கிய
விஞ்ஞான விஷயங்களின் மழை மறுக்க முடியாத பகுதியாகிவிட்டது.
இதனால், எப்போது, எங்கே, என்ன மாதிரி மழை பெய்யும் என்ற அச்சம் தொழிற்சாலைகளுக்கு நடுவே வாழ்ந்து கொண்டிருக்கும் நமக்கு உண்டு.
நார்வேயைச் சேர்ந்த ஆர்னி
நெஸ் என்னும் சிந்தனையாளர் ஆழ் சூழலியல் என்ற தத்துவத்தை முன் வைத்தார். இந்த ஆழ் சூழலியல் என்ற புதியதத்துவம், பொறுப்பான சீரமைப்பு தேவை என்பதை வலியுறுத்துவதாக ஏற்றுக் கொள்ளப்பட்டு உள்ளது
ஆழ் சூழலியல் என்றால் என்ன? இயற்கை வளங்களைத்தன் ஆதிக்கத்தின் கீழ்கொணர்ந்து, பின்னர் அவற்றை தனக்கு
சாதகமாகப் பயன்படுத்தும் விஞ்ஞானம் சார்ந்தது
மனித இனமும், இயற்கையும் சமத்துவத்துடன் இருக்கும்
அமைப்பில் நீரே அனைத்து உயிரினங்களையும் இணைக்கும்
கயிறாக இருக்கிறது.
நாம் வாழும் நிலம், சவாசிக்கும் காற்று செடிகள், உணவு வகைகள் ஆகிய எல்லாவற்றிலுமே நீர் ஊடு
ருவி உள்ளது. வெப்பமும் காற்றும் முடிவில் நீராக மாறும் போது
தான் உயிர் உண்டாகிறது
தண்ணீர் எப்போதுமே உருமாறுகிறதே தவிர, அழிவதில்லை ஆக இயற்கை வழிபாடு தொடங்கி, பகசுமை இயக்கங்கள், சூழலியல் இயக்கங்கள் தொடங்கி ஆழ் சூழலியல் என்று மேலை
நாட்டு தத்துவம் வரை அனைத்து கொள்கைகளும் நீரையே
மையம் என்று சுட்டிக்காட்டுகின்றன
அற வாழ்க்கையே மனிதனுக்கும் இயற்கை வளத்துக்கும்
இடையே உள்ள உறவை வலுப்படுத்தும். அற வாழ்வின் விளை
வாகக் கிடைக்கும் செழுமையே உலகின் வளம் அறம் நிறைந்த உலகில் நீர்நிலைகள் வற்றாது, காடுகள் அழியாது, நஞ்சை நிலம் வறண்டு கட்டுமானப் பகுதியாக
மாறாது. அறத்தைத் தொடர்ந்து வரும் செழிப்பும் பொருளுமே
மனிதனுக்கு மன அமைதியையும், சூட்சுமமானதொரு இனிமையையும் தருகின்றன..