ஒரே ஒரு நிமிடத்தில் நீங்களே திருமணப் பொருத்தம்பார்க்கலாம்

ஒரே ஒரு நிமிடத்தில்
நீங்களே திருமணப் பொருத்தம்
பார்க்கலாம்..

திருமணம் என்பது ஆயிரங்காலத்துப் பயிர்

சொர்க்கத்தில் திருமணம் நிச்சயிக்கப்படுகிறது

நாம் பிறக்கும் போதே இன்னாருக்கு இவள் துணைவி இன்னாருக்கு இவன் துணவன் என்பதை அந்த
பிரம்மன் எழுதி விடுகிறான். 

பொதுவாக கணவனை விட மனைவி வயதில் சில ஆண்டுகளாவது இளையவளாகத்தான் இருக்கிறாள்...

ஒரு கணவன் இந்த பூமியில் பிறக்கும் போது மனைவியும் பிறப்ப
தில்லை. என்றாலும், அந்த பிரம்மன், இந்தக் கணவன் பிறக்கும் போதே இவனுக்கு இந்த ஊரில் பிறக்கப்
போகும் என்பதை எழுதி விடுகிறான்.

 மலையில் விளையும்
நாரத்தங் காய்க்கும் கடலில் விளையும் உப்புக்கும்
முடிச்சுப் போடுபவன் ஆண்டவன். 

அடுத்த வீட்டில் பெண்ணை வைத்துக் கொண்டு பல ஆண்டுகளாகத்
தன் மகனுக்கு ஊரெல்லாம் பெண் தேடிச் சுற்றி அலையும் பெற்றோர், தன் மகனுக்கு திருமண வேளை
வரும்போது அடுத்த வீட்டு பகையையும் மறந்து அந்தப்
பெண்ணையே மருமகளாக ஏற்றுக் கொள்வர். 

அழகில்லாத அந்த மருமகள்கூட திருமண வேளை வரும்
போது ரதியாகக் கண்ணுக்குத் தெரிவாள். 

வரதட்சணையோ, கௌரவமோ அல்லது அழகோ அங்கே
ஒரு தடையாக இருப்பதில்லை.

தன்னுடைய மகனுக்கு பெரிய இடத்தில் திரும்
ணம் முடிக்க வேண்டுமென்று சிறுவயது முதலே கற்பனைக் கோட்டையைக் கட்டி வந்திருப்பர் பெற்றோர். ஆனால், அந்த மகனோ திருமணப் பருவம் வந்தவுடன்
ஒரு ஏழைப் பெண் மீது காதல் கொண்டு அவளையே திருமணமும் செய்து கொண்டு வாசலில் வந்து நிற்பான். 

திருமண விஷயத்தில் நாம் நினைத்தது
எதுவும் நடப்பதில்லை . இதற்குக் காரணம் ஆண்டவன் போட்ட முடிச்சு. அந்த முடிச்சை மனிதரால் அவிழ்க்கவோ மாற்றிப் போடவோ முடியாது.

அவரவர் செய்த ஊழ்வினையின் பயனுக்கு
ஏற்பவே திருமண வாழ்க்கை அமைகிறது. 

நல்ல குணமுள்ள மனைவிக்கு 
கெட்ட குணமுள்ள கணவனோ அல்லது 

நல்ல குணமுள்ள கணவனுக்கு 
கெட்ட குணமுள்ள மனைவியோ, 

ஏழைக் கணவனுக்கு பணக்கார
மனைவியோ 
அல்லது பணக்காரக் கணவனுக்கு
ஏழை மனைவியோ, 

அழகுள்ள கணவனுக்கு அழகில்லாத மனைவியோ அல்லது 
அழகுள்ள மனைவிக்கு
அழகில்லாத கணவனோ, 

படித்த கணவனுக்கு படிக்காத மனைவியோ அல்லது படிக்காத கணவனுக்கு
படித்த மனைவியோ - இப்படி அமைவதெல்லாம்
ஆண்டவன் செயல்.

இப்படி அமையும் திருமணம் என்பது கண நேரத்தில் நடந்தேறிவிடும். 

ஆனால் திருமணம் நடந்து
முடிந்த பின்னர் இல்லறமெனும் நல்லறத்தில் புகும்.

அந்தத் தம்பதிகள் சண்டை சச்சரவுகள் இன்றி,
சந்தான பாக்கியத்தோடு, சகல ஐஸ்வர்யங்களோடு,
தீர்க்காயுளோடு வாழ வேண்டாமா?

'அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது' - வள்ளுவர் வாக்கு..

அன்பும் அறனும் உடைய இல்வாழ்க்கை ஒருவ
அமைய வேண்டுமானால், 
கணவன் மனைவி
இருவருடைய ஜெனன ஜாதகத்திற்கிடையே 

தினம், கணம், மகேந்திரம், ஸ்திரீதீர்க்கம், யோனி, ராசி, 
ராசிதிபதி, வசியம், ரஜ்ஜு,வேதை என்ற 10 வித பொருத்தங்கள் வேண்டுமென்று ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. 

இந்த பத்து பொருத்தங்களில் 
கணம், யோனி,ரஜ்ஜீ என்ற 3 பொருத்தங்கள் மிக முக்கியமானவையாகும். 

கணப் பொருத்தம் இல்லாவிட்டால் குணம் வக்கப் போவதில்லை. 

யோனிப் பொருத்தம் இல்லா
விட்டால் தாம்பத்திய உறவில் இன்பம் கிடைப்பதில்லை. 

ரஜ்ஜுப் பொருத்தம் இல்லாவிட்டால் மாங்கல்யம் நிலைப்பதில்லை. 

ரஜ்ஜுப் பொருத்தம் இல்லா
விட்டால் திருமணமே செய்யக் கூடாது என்கிறது ஜோதிட சாஸ்திரம்.

 எனவே மணமக்கள், திருமணத்
திற்குப் பின்னர் நிலைத்த சந்தோஷத்தோடு வாழ
வேண்டுமானால், திருமணம் செய்யும் முன்னர்
ஜாதகப் பொருத்தம் பார்க்க வேண்டியது அவசியமாகும்.

RECENT POST

தேங்காய் நீரில் இத்தனை நன்மைகளா?

ஒரு கோப்பை தேங்காய் நீரில் இத்தனை நன்மைகளா?????? ✳ தேங்காய் நீரில் கலோரிகள் மிகக்குறைவு. இதனை அருந்துவதால் உடல் புத்துணர்ச்சி அட...