மனிதனின் உருவ அமைப்பிற்கும், சிதம்பர நடராஜர் சன்னிதிக்கும் நிறைய ஒற்றுமை இருக்கிறது.
பொன்னம்பலத்தில் நமசிவாய மந்திரம் பொறிக்கப்பட்டு வேயப்பட்டுள்ள 21 ஆயிரத்து 600 தங்க ஓடுகள், மனிதன் ஒரு நாளைக்கு விடும் சுவாசத்தின் எண்ணிக்கையைக் குறிக்கும் என அறியப்படுகிறது ,
பொன்னம்பலத்தில் அடிக்கப்பட்டுள்ள 72 ஆயிரம் ஆணிகள் என்பது மனிதனின் நாடி நரம்புகளை குறிக்கிறது,
கோவிலில் உள்ள 9 வாசல்கள்,
மனித உடலிலுள்ள 9 துவாரங்களை நினைவுபடுத்துகிறது.
இதுதவிர ஆன்மிக ரீதியான அமைப்பும் உண்டு. ஐந்தெழுத்து மந்திரமான சிவாயநம என்பதின் அடிப்படையில் பொன்னம்பலத்தின் ஐந்து படிகளும், 64 கலைகளின் அடிப்படையில் சாத்துமரங்களும், 96 தத்துவங்களைக் குறிக்கும் விதமாக 96 ஜன்னல்களும், 4 வேதங்கள், 6 சாஸ்திரங்கள், பஞ்ச பூதங்களின் அடிப்படையில் தூண்களும் அமைக்கப்பட்டுள்ளன.