என்னுடையவள் நீ்

கதிர்: "அபி உன்கிட்ட  கொஞ்சம் பேசனும் கேண்டின் வறியா"

அபி: "நீ போடா லேப்கு போய்ட்டு வர்ரேன் "

அபி: "சொல்லுடா என்ன விசயம் "

கதிர்: "நான் உன்ன  விரும்புரேன் "
குடித்துக்கொண்டிருந்த காபி அவன் கூறியதை கேட்டு , புரை ஏறி விட்டது
தான் கேட்டது கனவா நினைவா என்ற அதிர்ச்சியில்

அபி:  "என்னடா கனவு எதும் கண்டியா"

கதிர்: "உன்ன எனக்கு பிடிக்கும் மனப்பூர்வமா உன்ன விரும்புரேன்
ஐ லவ் யூ"

அபி: "லூசுமாரி பேசாம  போய் எக்ஸாம்க்கு படிக்குற வழியப்பாரு"

கதிர்: "அணு விளையாட்டு
இல்ல சீரியஸ்"

அபி: "நானும் சீரியஸ்ஸாதான் சொல்றேன் இனி என்கிட்ட பேசாத கோபமாக சென்றுவிட்டாள் "

இரவு முழுவதும் அணுவிற்கு தூக்கம் வரவில்லை

               மறுநாள்

அபி: "கௌதம்,,,கௌதம்,,,, நில்லு,,,கௌதம்,,,,"

அவன் அவளை நிமிர்ந்து கூட பார்க்காமல் சென்று விட்டான், போன்,மெசேஜ் விடாமல் செய்தாள் எதற்கும் அவனிடம் இருந்து பதில் இல்லை , இப்படியே  இருபது நாள் சென்றது

'ஏன்டா இப்படி பண்ற மனசே சரியில்ல எக்ஸாம்க்கு படிக்க முடியல  இந்த மெசேஜ்க்கு கௌதமிடம்மிருந்து உடனே பதில் வந்தது'

கதிர்: "இது பைனல்இயர் மனசுலபோட்டு எதையும் குழப்பிக்காம நல்லா படி"

அபி: "அப்ப நீ என்ட பேசமாட்டியா
சிணுங்களுடன் கேட்டவளின் முகத்தை எண்ணி சிரித்தவன்

கதிர் : "எக்ஸாம் முடியட்டும் எதாஇருந்தாலும் அப்பறம் பேசலாம்"

எக்ஸாம்க்குப்பின் அபி எவ்வளவு முயன்றும் கௌதமை தொடர்புகொள்ள முடியவில்லை

        ஒருவருடதிற்கு பின்,,,,,

அபி தனக்கு வந்த வரன்களை எல்லாம் தட்டிவிட்டுக்கொண்டிரந்தாள்

ஒரு நாள் கதிர் இருந்து போன் வந்ததது

கதிர்: "அணு எப்படி இருக்க"?

அபி: "நான் இப்படி இருந்தா உனக்கு என்னடா நாயே"

கதிர்: "என் மேல கோபமா இருக்கியா அணு"

அபி: "சொல்லாமகொல்லாமா  ஓடிப்போனவன் மேல கோப்ப்படாமா  பாசப்பயிறையா வளப்பாங்க, 
இப்ப என்ன ம** குடா போன்பன்ன"

கதிர் :"எனக்கு நெக்ஸ்ட் வீக் என்கேஜ்மென்ட் பிக்ஸ் ஆயிருக்கு"

அபி : " அதுக்கு என்ன கூப்பிடலாம்னு போன் பண்ணியா போன வைடா நாயே "

அந்த நேரம் அவளின் தந்தை உள்ளே வர

அபி அப்பா:  "யாரம்மா திட்டிட்டு இருக்க"

அபி : "என் ப்ரெண்ட் திடீர்னு மேரேஜ்னு போன் பண்ற அப்பா ரெண்டு மாசத்துக்கு முன்னாடியே என்கேஜ்மென்ட் முடிஞ்சிருக்கு எனக்கு இப்பதான் இன்ஃபார்ம் பண்றா அதான்  திட்டினேன் "

அபி அப்பா : "சரிம்மா நாளைக்கு  உன்ன  பொண்ணு பாக்க வராங்க, வரச்சொல்லட்டுமா"?

அபி : "என்னப்பா என்ன கேக்குறீங்க"

அபி அப்பா:   "இந்த வரனையும் நீ வேணான்னு நினைச்சா இப்பவே சொல்லிடு நாளைக்கு அவங்கள வரவேண்டாம்னு சொல்லியர்றேன் "

அபி : "இல்லப்பா இனி நான் எதுவும் சொல்ல மாட்டேன் உங்களுக்கு புடிச்சிருந்தா சரி "

ஆச்சரியத்தோடு மகளை பார்த்தவர்,  அதற்கு மேலும் கேட்க விரும்பாமல்
'வேதாளம் திரும்பவும் முருங்கை மரம் ஏறி விட்டால் என்ன செய்வது என்ற பயம்தான் '

அபி அப்பா:  "சரிமா,  என்று மகளிடம் கூறிவிட்டு வெளியே வந்து மனைவியிடம் இப்பதான் உன் பொண்ணுக்கு புத்தி வந்துருக்கு நாளைக்கு  வர்ற  வரன எப்படியும் பேசி முடிச்சிடனும் ,,,"

                மறுநாள்

அபி அப்பா :  " இவர்தான் மாப்பிளை"
என்று அவள் தந்தை காட்டிய இடத்தில்

கதிரை பார்த்து அதிர்ச்சி கலந்த மகிழ்ச்சியோடு நின்று விட்டாள்

அபி அப்பா:  " நீ படிச்ச காலேஜ்ல தான் மா மாப்பிள்ளையும் படிச்சிருக்காரு "

கதிரோ அபியின்  தந்தை காதில்
ஏதோ கூறினான்

"அதுக்கு என்ன மாப்ள பேசிட்டு வாங்க "

அபி மாப்ள உங்க கிட்ட தனியா பேசணும் பேசிட்டு வாங்க

கதிர்  :  "கோபமாய் இருக்கியா அபி"

அபி  : "இப்ப எதுக்கு இந்த பொண்ணு பாக்குற நாடகம் ,உன்ன கல்யாணம் பண்ணிக்க எனக்கு விருப்பமில்லை நீ போ"

கதிர்  : "நான் உன்கிட்ட ஏன் காதலை சொன்னப்ப பேசாத
போன்னு சொன்ன"

அபி : "நான் சொன்னா  நீ பேசாம
இருப்பியா, நானே திரும்ப போன்   பண்ணேன் ,மெசேஜ் பண்ணேன் எதுக்குமே நீ ரெஸ்பான்ஸ் பண்ணல ஏன்"

கதிர் : "என் மேல நீ வச்சிருக்க காதலை நீ  உணரணும்ங்குறதுக்காகதான் "

அபி : " புரியாமல் அவனை பார்த்தாள் "

கதிர் : "நீ என்ன விரும்புறேன்னு எனக்குத் தெரியும் மை டியர் "

அபி  : "தெரிஞ்சவன் ஏன் ஒரு வருஷமா தவிக்க விடனும் "

கதிர் : "ஏன் லட்டு பாப்பா, என்ன நம்பிவர்றவள என் சொந்த உழைப்பில்
நான்காப்பாற்ற வேண்டாமா அதுக்குத்தான்
இப்ப சொல்லு நான் உன்னை விரும்புகிறேன்
என்ன கல்யாணம் பண்ணிக்க சம்மதமா "

அபி :  அவள் கோபமாக முகத்தை
திருப்பிக்கொள்ளவும்  அவளுக்காக அவன் வாங்கிட்டு வந்த கிப்டை
அவள் முன் மண்டியிட்டு ,
"என்ன கல்யாணம் பண்ணிக்கிறியா
அபி குட்டி

அவனது proposal அவள் மனம் முழுவதும் இன்பத்தை வாரி இறைத்திருந்தது பனிமலையின் நனைந்ததைப்போல் உணர்ந்தவள், அதை மறைத்துக் கொண்டு

அபி:  "உன்ன கல்யாணம் பண்ணிக்கிறேன் ஆனா லவ் பண்ண மாட்டேன் "

கதிர்:  அதிர்ச்சியோடு அவளை புரியாத  பார்வை பார்த்தான்

அபி:  "ஆமா நான் உன்ன லவ்
பண்ணமுடியாது,
என்கூட காலேஜ்ல படிச்ச கதிர்த்தான் விரும்புறேன் "

கதிர்: "அப்ப நான் யாரு டி"

அபி: "நீ என்ன பொண்ணு
பாக்கவந்துருக்க மாப்பிள "

கதிர்:  "சரி அப்ப இந்த பொண்ணு பிடிக்கலைன்னு சொல்லிட்டு நான் கிளம்பறேன் "

அபி :  "உன்னை என்ன பண்றேன் பாரு அவள் கை வலிக்கும் வரை அவனை அடித்து ஓய்ந்தவள் உன்னால எங்க அப்பாட்ட எவ்வலோ திட்டு வாங்கி இருக்கேன் தெரியுமாடா"

கதிர்:  "தெரியும் டியர் ,பட் நீ ஒன்னு தெரிஞ்சுக்கோ , உனக்கு வந்த வரன்
எல்லாம் தட்டி போனது -நீ சொன்னால மட்டும் இல்ல
மறைமுகமாக இருந்து நான்தான்
உனக்கு வந்தவரன்
எல்லாத்தையும் தட்டிவிட்டேன் "

அபி :  " அட பிராடு பயலே...."

கதிர்: " அப்புறம் நீ வேணான்னு சொன்னா உடனே உங்க அப்பா பேசாம இருந்துருவாரூன்னு நெனச்சியா"

தன் தந்தையைப் பற்றி அறிந்தவள் அவன் கூறியதற்க்கு இல்லை என்பது போல் தலை அசைத்தாள்

கதிர்: "என்  காதலை உனக்கு உணர்த்திட்டு எப்படி  டி  உன்ன வேறு ஒருத்தனுக்கு தூக்கி கொடுப்பேன் , என்னைக்கு இருந்தாலும்  என்னுடையவள் நீ "

அவனது காதலின் ஆழத்தை உணர்ந்தவள் அவன் நெஞ்சில் முகம்
புதைத்துக்கொண்டாள்

அங்கிருக்கும் சூழ்நிலையை அவன் உணர்ந்திருந்தாலும்
அந்த நிமிடம் தன் நெஞ்சில் புதைந்திருந்தவளை விடுவிக்க அவனுக்கு மனம் வரவில்லை
வெளியே பேச்சு குரலும் , சிரிப்பொலியும்  தான் அவனை சுய உணர்வுக்கு
கொண்டுவந்தது

கதிர்: "நம்ம சேரனுமா , வேணாமாடி  "

அவன் இப்படிக் கேட்டதும் சட்டென்று   அவனது நெஞ்சில் கை வைத்து தள்ளிவிட்டு  கோபத்தோடு அவன் முகத்தை பார்த்தாள்

கதிர்: "நம்மளைப் உன் அப்பா இப்படி பார்த்தாரு அவ்வளவுதான் , நம்மளை நாமே
காட்டிகொடுத்தமாதிரி ஆயிடும்
என்னோட சின்ன கிப்ட் "
என்றபடி அபியின் கரங்களைப் பற்றி
அவள் பிஞ்சு விரல்களில் முத்தமிட்டான்

தன்னவனின் முதல் இதழொற்றளிள்  மயங்கி நின்று விட்டாள்  அபி ,
தை மாசம் கல்யாணம் என்று தந்தையின் குரல் செவியில் ஒலித்தது, ,,,,,,

RECENT POST

தேங்காய் நீரில் இத்தனை நன்மைகளா?

ஒரு கோப்பை தேங்காய் நீரில் இத்தனை நன்மைகளா?????? ✳ தேங்காய் நீரில் கலோரிகள் மிகக்குறைவு. இதனை அருந்துவதால் உடல் புத்துணர்ச்சி அட...