கிராம்பு குறித்த சில தகவல்கள்:
மணப்பொருளாகவும், மூலிகைத்தன்மை
உடையதுமான கிராம்பு தொன்றுதொட்டுச்
சித்தர்களாலும், தற்காலத்தில் மருத்துவப்
பயன்பாடுகளுக்காக உள்நாட்டு, வெளிநாட்டு
சந்தையில் அதிகம் தேவைப்படும்
பொருளாக மாறிவருகிறது.
சைவ உணவான பாயசம், கடலை
குருமா, அசைவ உணவான பிரியாணி,
உட்பட பல உணவுப்பொருட்களில்
மணத்தையும் சுவையையும் கூட்டவல்லதாக
கிராம்பு உள்ளது.
வாய் துர்நாற்றத்தைப் போக்கும்
அருமருந்து கிராம்பு..
பல்வலி வந்தால், வலிக்கும் இடத்தில்
ஒரு கிராம்பை வைத்து அழுத்திப்பிடித்தால்
பல்வலி போயே போச்...
வாயுத்தொல்லை, மலச்சிக்கலுக்கு
கிராம்பு நல் மருந்து.
ஆயுர்வேத மருந்துகளில் கிராம்புக்கு
முக்கிய இடம் உண்டு. செரிமானக்குறைவு,
சுவாசக் கோளாறைசரி செய்ய உதவும் கிராம்பு
கிராம்பைப் பொடி செய்து
வைத்துக்கொண்டு தேனில் குழைத்து காலை மாலை சாப்பிட்டால் இருமல், காய்ச்சல் குறையும். கொழுப்பைக் கரைக்கும். |
வெந்நீரில் கிராம்புத் தைலம் இரண்டு சொட்டு விட்டு ஆவி பிடிக்க தொண்டை வலி, கபக்கட்டு, காய்ச்சல், ஜலதோஷத்துக்கு
நிவாரணம் கிடைக்கும்.
கிராம்பில் கார்போ ஹைட்ரேட்,
ஈரப்பதம், புரதம், கொழுப்பு, நார்ப்பொருள், மினரல், ஹைட்ரோகுளோரிக் அமிலச்
சாம்பல்கள், கால்சியம், பாஸ்பரஸ்,
தயமின், ரிபோ பிளேவின், நயாசின்,
வைட்டமின் சி மற்றும் ஏ போன்றவை
உள்ளன. கிராம்பின் மொட்டு, இலை,
தண்டு போன்றவற்றிலிருந்து எண்ணெய் எடுக்கப்படுகிறது.
பற்பசை, செண்ட், சோப் என கிராம்பு
பயன்படுத்தி தயாரிக்கும் பொருட்கள்
நிறைய உண்டு.