காதல் வேண்டாம் அட்லிஸ்ட் ஒரு காஃபி போதும்

இத்தனை வருஷம் கழிச்சும் அவளை எதார்த்தமா பார்த்தும் அவகிட்ட பேசாம ஏண்டா கோவிச்சுக்கிட்டு வர்ற ?

அவ மேலே இருந்த லவ் எல்லாமே போய்டுச்சா ....என்றான் நண்பன் சசி

டே ....சசி இந்த கதிரோட காதல் என்னைக்குமே போவாதுடா ...

கயல் என்னை ஏமாத்திட்டான்னு அபாண்டமா பொய் சொல்ல மாட்டேன் ..

எங்க காதலுக்கு இந்த பாழாய் போன வசதி, அந்தஸ்து  தான் தடையா இருந்துச்சு ..
வீட்ல உள்ளவங்கள கொன்னுட்டு அவங்க பொணத்து மேலே எங்க காதல் வாழ விரும்பலை ...

மனசுக்கு பிடிச்சு தான் விரும்புனோம்
அதே மாதிரி எங்க ரெண்டு குடும்பத்து வாழ்வுக்காக எங்க மனசை கொன்னுட்டு தான் பிரிந்தோம் ..

இன்னும் அவளை நான் வெறுக்கலை
அவ எங்கிருந்தாலும் புருஷன் - பிள்ளைகளோட நல்லா இருக்கணும் ...
அவ வீடு இருக்குன்னா இந்த ஏரியாக்கு வந்தோம், தற்சயலா  பார்த்ததும் பேச கூட வேணாண்டா ஒரு ஸ்மைல்லாவது பண்ணியிருக்கலாமே?

என்னை பார்த்ததும் அவ உம்முன்னு இருக்கவும் தான் கோவிச்சுக்கிட்டு வந்திட்டேன் என்றான் கதிர் ...

அவ பில்டர் காஃபி எப்படி போடுவா தெரியுமா ?? ..

எவ்வளவு டென்ஷன் இருந்தாலும்
அவ கையாலே ஒரு பில்டர் காஃ பி குடிச்சா டென்ஷன் எல்லாம் நிமிசத்துல காணாம போய் இருக்கும் தெரியுமா ?

அவளோடு காலமெல்லாம் காதலோடு வாழணும்னு ஆசைப்பட்டேன் அது தான் முடியாம போச்சு அட்லிஸ்ட் ஒரு காஃபி கூட குடிக்க முடியாம போச்சேடா என்று பீல் பண்ணினான் கதிர் ...

டே ...உன்னை பார்த்தப்ப அவ பக்கத்துல அவங்க மாமியார் இருந்தாங்களாம் அவங்க அந்த காலத்து மாதிரி சந்தேகபடுவாங்க  அதான் உன்கிட்ட பேசலையாம் உனக்கு பிடிக்கும்னு பிளாஸ்க்ல உன் கயல் காஃபி கொடுத்திருக்காடா என்றான் சசி
அவன் கைகளில் பிளாஸ்கை வைத்தான் ...

சசி கொடுத்தவுடனே பிளாஸ்கில் இருந்த காபியை பிளாஸ்டிக் கப்பில் ஊற்றி காதலோடு குடிக்க ஆரம்பித்தான் கதிர் ...

RECENT POST

தேங்காய் நீரில் இத்தனை நன்மைகளா?

ஒரு கோப்பை தேங்காய் நீரில் இத்தனை நன்மைகளா?????? ✳ தேங்காய் நீரில் கலோரிகள் மிகக்குறைவு. இதனை அருந்துவதால் உடல் புத்துணர்ச்சி அட...