ஒவ்வொரு மணித்துளியும்

ஒவ்வொரு
மணித்துளியும்
என் நினைவு நாளங்கள்
அத்தனையும்
உனக்காக
ஒதுக்கியிருந்தேன் !

ஒவ்வொரு
கத்திருப்புகளிலும்
கரைந்துபோன
காலங்களைபற்றி
கவலைப்படாமலிருந்தேன் !

எதிர்காலம்
என்ற கேள்விக்கு
நீ தான்
பதில் என்றிருந்தேன் !

உன் அருகமையே
என் வாழ்வின்
அளப்பரிய
ஆனந்தம்
என்றிருந்தேன் !

ஆனால்....
கண நேரத்தில்
என் காதலை
கசக்கி எறிந்துவிட்டு
சென்றுவிட்ட
உன்னால்
இன்று .....

கடந்துபோன
காலங்களை
எண்ணி
கவலையில்
ஆள்வதும்
நீயில்லா
எதிர்காலத்தை
எண்ணி
பேதலிப்பதுமாய்..!

என்
நிகழ்காலம்
பயணித்து
கொண்டிருக்கிறது !

உன்
நினைவுகளின்
வலிகளோடு ....!

RECENT POST

தேங்காய் நீரில் இத்தனை நன்மைகளா?

ஒரு கோப்பை தேங்காய் நீரில் இத்தனை நன்மைகளா?????? ✳ தேங்காய் நீரில் கலோரிகள் மிகக்குறைவு. இதனை அருந்துவதால் உடல் புத்துணர்ச்சி அட...